Friday 27 December 2013

எனக்கு ஒரு சந்தேகமுங்க!

எழுவதுக்கு 28 மதிப்பெண்கள் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் முதல்வர் பதவியேற்றது முதல், ஏழு நாட்களில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமாம்.
ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் விதி விளயாடுதுன்னு பாருங்க!

திமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் தனக்கு மகிழ்ச்சியே என்று டமில் வாட்ச்மேன் கூறியுள்ளார்.  கருப்பு எம்ஜியார அப்படியே ஓய்ச்சுடலாம்னு செமயா ப்ளான் பண்றாருன்னு நினைக்கேன்!  சகலகலாவல்லவர் டி ஆர் திமுக-வில் இணைந்தார்.  சட்டசபைக்கு ஒரு வடிவேலு என்றால் பாராளுமன்றத்துக்கு டி.ஆர்!
என்னங்க நான் சொல்றது சரிதானே?

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வில் புதிய பார்கோடுடன் கூடிய விடைத்தாளை அறிமுகப்படுத்துவதால் தேர்வின் போது மாணவர்களோ அல்லது விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ செய்யும் முறைகேட்டை முற்றிலுமாக தடுக்க முடியுமாம்.  அதைவிட எக்ஸாமே இல்லேன்னா முறைகேடே நடக்காதேங்க!
அல்லாரும் ஆல் பாஸ்!  நோ சூஸைட்ஸ்!  கரீட்டாப்பா?

மோடிக்கு செக் வைக்க காங்கிரஸ் சைபர் படை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் கூறுகின்றன.  அதை நடைமுறை படுத்துவதற்காக ஒரு திட்டம் வரும் 2025-ற்குள் தயாரிக்கப்பட்டு அதில் உறுப்பினர்களை 2052-க்குள் சேர்த்துவிடுவார்கள்.  உறுப்பினர்களின் முக்கிய தகுதியாக அவர்களின் வயது இன்றோடு 60 பூர்த்தியாகி இருக்கவேண்டும்.  அப்போதுதானே துள்ளிகுதித்து ஒரு உத்வேகத்துடன் செயல்படமுடியும்!
என்ன, நான் சொல்றது சரிதானே?

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இலவச புனிதப் பயணம்: தமிழக அரசு பரிசீலனை

திருச்சி சந்திப்பில் காஃபி வாங்க நின்றிருந்தவரிடம் ஒரு பெண் வந்து தனக்கு தலை சுற்றுகிறது. நின்று காஃபி வாங்க முடியவில்லை! எனக்கும் ஒரு காஃபி வாங்கித்தாருங்கள் என்று கூறியுள்ளார்.  பாவம் என்று நினைத்து காஃபி வாங்கிதந்தவரை வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என்றழைத்தவர் தனக்கு பணப்பிரச்சனை உள்ளது.  எனவே எனக்கு உதவிசெய்தால் உங்களோடு உல்லாசமாக இருக்க நான் தயார் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதை கேட்டு திடுக்கிட்ட அவர் ஒரு காஃபியோடு சனியன் தொலையட்டும் என்று ஓடி ஒளிந்துவிட்டார்.
நாட்டில் ஆண்களுக்குத்தான் எவ்வளவு சிரமங்கள்?!

நேற்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி புகைப்படத்துடன் வந்துள்ளது.  அதில் லிபியாவின் தலைநகர் பெய்ருட்டில் நடந்த குண்டுவெடிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நான் படித்த பூகோளத்தில் லிபியாவின் தலைநகரம் திருப்போலி என்று ஞாபகம்.  பெய்ருட் என்பது லெபனான் நாட்டின் தலைநகரம். வாழ்க தமிழ் பத்திரிக்கைகள்!

மதுரை சட்டக்கல்லூரி மாணவி, தமிழகத்தில் மதுவிலக்கை கோரி உண்ணாவிரதம் இருப்பதை எந்த பத்திரிக்கை/தொலைகாட்சிகளும் வெளிச்சம் போட்டு காட்டாமல் புறக்கணிப்பதாக எனக்குப்படுகிறது. நாமதாம்பா அந்த பொண்ணுக்கு ஆதரவு கொடுக்கணும்!

வரும் தேர்த்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் பிரதமராகமாட்டேன், ராகுலுக்கு வழிகாட்டுவேன் என்று தொடர்ந்து பத்து ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்ட, நேரு குடும்பத்திலிருந்து வராத, பாராளுமன்ற தேர்த்தலை சந்திக்காத மாபெரும் சாதனையாளர் திரு மன்மோகன் சிங் சூளுரைத்துள்ளார்.
எஸ்கேப்டா சாமி

2 comments:

  1. #நாட்டில் ஆண்களுக்குத்தான் எவ்வளவு சிரமங்கள்?!#
    பல இடங்களில் ஆண்களுக்கு ஆண்களால் சிரமம் பெருகி வருகிறது ,என்னத்தைச் சொல்ல ?

    ReplyDelete